தலையங்கம் : முஸ்லிம் சமுதாயம் 73 கூட்டமாக பிரியும்! – ஹதீத் விளக்கம்! உண்மையான தேசபக்தி… பிரிவும் பிளவும் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்(சமூகம்) 73 பிரிவுகளாகப் பிரியும் அவற்றில் ஒரு பிரிவு தவிர மற்றவை நரகத்தில் இருக்கும். நபித்தோழர்கள் கேட்டார்கள் : அந்த (விடுதலை பெற்ற) பிரிவு எது இறைத் தூதரே? நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அவர்கள் என்னையும் என் தோழர்களையும் பின்பற்றுவோர்கள். (அறிவிப்பு : சுனன் அபூதாவூத் 4596, சுனீன் திர்மிதி […]
சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : 2025 மே மாத தொடர்ச்சி…. உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்ட மதகுருமார்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதித்து மக்களை ஏமாற்றி நரகில் தள்ளுவார்கள் என்றே கூறுகிறோம். அதுவும் குர்ஆன் கூறுவதையே எடுத்து வைக்கிறோம். இதற்கு ஆதாரமாக அ.கு.33:66-68, 34:31-33, 37:26-34, 38:55-64, 40:47-49, 41:29, 43:36-45 போன்ற பல குர்ஆன் வசனங்களையே […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 மே தொடர்ச்சி… அதனால்தான் இறைவன் இணை வைப்பதற்கு அடுத்த பெருங்குற்றமாக, முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பிடுகின்றான். இன்னும் சொல்லப்போனால், இதையும் தனக்கு இணை வைப்பதாகவே குறிப்பிடுகின்றான். “இவர்கள் அல்லாஹ்வை யன்றித் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீகையும், (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும், ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, இவர்கள்(யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அடிபணிவதற்குரிய நாயன், அவனையன்றி வேறெவனும் இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவற்றைவிட்டு அவன் […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025 மே மாத தொடர்ச்சி… தீஹ் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்தார்கள் : எனது சமுதாயத்தாரே! உங்களுக்கென்றே அல்லாஹ் எழுதிவைத்துள்ள தூய்மையான (பைத்துல் மக்திஸின்) இந்தப் பூமியில் நுழையுங்கள். (அடக்குமுறையாளர்களான அங்குள்ள “அமலேக்கியர்” எனப்படும் எதிரிகளை அஞ்சி) புறமுதுகிட்டு ஓடாதீர்கள். (அவ்வாறு ஓடினால்) நீங்கள் இழப்புக்குள் ளானவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் கூறினார்) […]
வாழ்க்கையில் வெற்றி பெற….? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெற ஆசைப்படாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவதுமாகும். ஆனால் அந்த வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்த உண்மையான வெற்றியும் கூட பல சோதனைகளுக்கு பிறகே கிடைத்ததாகும். மேலும் உலகில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் இளம் வயதில் வெற்றி எனும் கனியை சுவைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல செல்வந்தர்களாக இருப்பவர்கள் எல்லோரும் வெற்றி […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாரம்லா அவர்கள் யாருடைய மகள்? மக்காவில் சக்தி வாய்ந்த காபிர்களின் தலைவன் அபஸுஃப்யான் அவர்களின் மகள். ஆதாரம்: முஹம்மது என்ற நூலில் பக்கம் 577. 2. பார்வை இல்லாமல் இருந்து பார்வை பெற்ற நபி யார்? யாஃகூப் (அலை). 12:93 3. இப்லீஸிடம் மரியாதைக்குரியவர் யார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துபவர். முஸ்லிம்: 5418 4. […]
(மது) போதை! அது அழிவின் பாதை! M. சையத் முபாரக், நாகை இஸ்லாம்தான் உலக மக்களுக்குத் தீங்குகளைத் தருகின்ற போதை, விபச்சாரம் போன்ற அனைத்து தீமைகளையும் வேரோடு கிள்ளி எறியச் செய்கிறது. மேற்கண்ட தீமைகள் மூலம் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற அதிகார வர்க்கத்திற்கு, மாஃபியா கும்பலுக்கு இது பிடிப்பதில்லை. அவர்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும், உள்வாங்கும் மதங்களை அனுசரிக்கும் இவர்கள், இவைகளை முழு மூச்சுடன் எதிர்க்கும் இஸ்லாத்தை விட்டு வைப்பார்களா? அதனால், இஸ்லாத்தை அழிக்க முழு உத்வேகத்துடன் […]
இறைநூல் (குர்ஆன்!) அய்யம்பேட்டை A. நஜ்முதீன் சென்ற இதழில் (மே 2025ல்) குர்ஆனில் மொழிபெயர்ப்பில் உள்ள சில குறைபாட்டிற்கான முக்கியமான காரணம் குர்ஆன் அருளப்பட்ட வரலாற்றை முழுமையாக சில மொழிபெயர்ப்பாளர்கள் அறியாதது, அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல் மொழிப் பெயர்ப்பை (தர்ஜுமாவை) வெளியிட்டது காரணம் என்பதை குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக மொழியைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாமலும் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்புக்கள் வெளியிட்டதாலும் சில குறைபாடுகள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். எந்தவொரு நூலையும் வார்த்தைக்கு வார்த்தை நேரிடையாக […]
வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2025 மே மாத தொடர்ச்சி…. சென்ற மே மாதம் இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல் ஆரோக்கிய வாழ்விற்கு நடை பயிற்சி “நடப்பதெல்லாம் நன்மைக்கே‘ எவ்வளவு முக்கியம் என்பதை காணலாம். 1. நலம் தரும் நடை எது? 2. எப்போது நடக்கனும்? 3. நடைபயிற்சி எவ்வளவு தூரம்? 4. நடப்பதா? ஓடுவதா? எது நல்லது? 5. நடராஜா – நடராணி 6. பள்ளிக்கு […]
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : 2025 மே மாத தொடர்ச்சி…. கண்மூடித்தனத்திடம் மாட்டிக் கொள்வது சுலபம் விடுபடுவதுதான் கடினத்திலும் கடினம். ஒரு முறை கண்மூடித்தனத்தின் பிடியில் சிக்கிக்கொண்டவர்கள். காலம் கடந்து அதன் கெடுதியை உணர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தவியாய் தவிக் கிறார்கள். சில நேரங்களில் கண்மூடித் தனத்திலிருந்து விடுபட செய்யப்படும் அரிய முயற்சிகளும் தோல்வியைத் தழுவுகின்றன. அதையும் மீறி சிலர் ஒன்றி ரண்டு வியங்களில் கண்மூடித்தனத்திலிருந்து மீள்கின்றனர். […]
யூசுஃப், நபியும் இறைச்சட்டமும்… A. அன்னார், சென்னை. மறு பதிப்பு : இஸ்லாமிய ஆட்சிக்குப்படாத ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் நாட்டு ஆட்சியாளருககு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மேலும் அந்நாட்டின் சட்டங்களை செயல்படுத்துவதோடு ஆட்சியில் (எவ்வகை ஆட்சியாயினும்) பங்கு பெறலாம். அதற்கு முன்னுதாரணமாக யூசுஃப்(அலை) விளங்கினார்கள் என்பதாக நவீன கால தவ்ஹீத் பேச்சாளர் ஒருவர் பேசி வருகிறார். அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றவேண்டும் என்பதாக வலியுறுத்தும் வசனங்களை அதற்கான ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியதை என்றும் […]
மீலாது ஓர் வரலாற்று ஆய்வு! எஸ். ஹலரத் அலி, திருச்சி. மீலாது அல்லது மவ்லிது (நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்) என்பது இஸ்லாமிய உலகில் பல நூற்றாண்டுகளாக பல பிராந்தியங்களில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். சுன்னத் வல் ஜமாத் முஸ்லிம்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையின் வரலாறு, தோற்றம், பரிணாமம் மற்றும் பல்வேறு பண்பாட்டு வெளிப்பாடுகளை விரிவாகப் பார்ப்போம். 1. மீலாது கொண்டாட்டத்தின் தோற்றம் மீலாது கொண்டாட்டம் நபி(ஸல்) அவர்களின் […]
அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம் M.A.ஹனீபா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம், அடியார் தனது நெற்றியை நிலத்தில் வைத்து சிரம் பணியும் மிகவும் தாழ்ந்த நிலையான ஸஜ்தாவாகும். ஸஜ்தாவில் அதிகம் துஆச் செய்யுங்கள் என்பது நபி(ஸல்) அவர்களின் ஏவலாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும்போதேயாகும். எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள். […]
தலையங்கம் : இஸ்லாத்தில் நாட்டுப் பற்று! உண்மையான தேசபக்தி… நாட்டுப் பற்று என்பது ஒரு நாட்டின் வரைபடத்தையோ, பூகோள அமைப்பையோ மண்ணையோ, கடலையோ, ஆறுகளையோ பாரத்மாதா என்று உருவபடுத்தி நேசிப்பதை விட அந்நாட்டைச் சேர்ந்த மக்களை நேசிப்பதுதான். இந்திய நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும் தான் உண்மையான இந்தியா தேசப்பற்று. இந்திய நாட்டில் ஆரோக்கியம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் […]
மறுமையில்…. சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்! அபூ அப்தில்லாஹ் இவ்வுலகில், உளப்பூர்வமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும் உதட்டளவில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயல்களான சமாதி வழிபாடுகளில் ஈடுபட்டாலும், ஏன்? சபரிமலை, திருப்பதி போன்ற கோயில்களுக்கே சென்று வந்தாலும், அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில், அவுலியாக்கள், அஆபிரீன்கள், சதாத்துகள், இமாம்கள் போன்ற இறந்தவர்களை இடைத் தரகர்களாகக கொண்டாலும், மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் மார்க்க மேதைகள், […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 ஏப்ரல் தொடர்ச்சி… மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவது மார்க்கமா? மதத்தின் தொடர்பாகும் சம்பந்தப்பட்ட ஐயங்களுக்கு இங்கே ஓரளவு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். நியாயமாகத்தான் படுகின்றது. ஆனாலும் எங்கள் முன்னோர்கள் எதில் இருக்கக் கண்டோமோஅதில் தான் எங்களுக்குப் பெருமை இருக்கிறது. சொர்க்கத்தில் இருந்தாலும், நரகத்தில் இருந்தாலும் அவர்களோடு இருக்கத்தான் விருப்பப்படுகிறோம் என்று சிலர் சொல்லலாம். அவர்கள் சொல்லில் உண்மை இல்லை. முன்னோர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றக் கூடியவர்கள், […]
முஸ்லிம்களுக்கு இன்றைய தேவை ஒருங்கிணைந்த பைத்துல்மாலும்! ஒன்றாக இணைக்கப்பட்ட கல்வியுமே!! S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த வாழ்வியல் நெறியும், வழிகாட்டுதலும் ஆகும். அதில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ்வொன்றும் இஸ்லாத்தில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) காட்டி தந்த ஒன்றை விட்டு விடுவதும் […]
ஜமாத் அல் முஸ்லிமீன்…. சுன்னத் வல் ஜமாத்தாக மாறியது சரியா? S. ஹலரத் அலி நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து நான்கு கலீஃபாக்கள் வரை முஸ்லிம்கள் “ஜமாத் அல் முஸ்லிமீன்” என்றே அறியப்பட்டனர். அதாவது, “முஸ்லிம்களின் சமுதாயம்” என்று பொருள். அப்போது எந்தப் பிரிவுகளோ அல்லது தனித்துவமான பெயர்களோ இருக்கவில்லை. “சுன்னத் வல்ஜமாத்” என்ற பெயர் பிற்காலத்தில் உருவானது. இதற்கான காரணங்களையும், எப்பொழுது உருவானது என்பதையும் விரிவாகப் பார்ப்போம். சுன்னத் வல் ஜமாத் என்ற பெயர் உருவாகக் காரணம் […]
இஸ்லாம் கூறும் உண்மையான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்றால் என்ன? எஸ். ஹலரத் அலி, திருச்சி. இஸ்லாமிய சமுதாயத்தில் ஒற்றுமை என்பது மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றில், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து, அவர்களை ஒரு உறுதியான சமுதாயமாக (உம்மத்தாக) உருவாக்கினார்கள். இந்த ஒற்றுமை வலியுறுத்தி, “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” (முஸ்லிம்களின் கூட்டம்) என்ற கருத்து இஸ்லாமிய சிந்தனையில் மையமான இடத்தைப் பெறுகிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!! நபி(ஸல்) கால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் சிந்திப்போம்! சீர்பெறுவோம்!! 1. குருடனும் பார்வையுடையவனும் ஒப்பாகமாட்டார்கள். (அதுபோல) ஈமான் கொண்டு அதற்கேற்ப நற்செயல்கள் செய்பவர்கள் தீமை செய்பவர்களுக்கு ஒப்பாகமாட்டார்கள். உங்களில் குறைவானவர்களே (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள். (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள்) அல்முஃமின் 40:58) 2. குருடரும், பார்வையுடையவரும் சமமானவரல்ல, இருளும், ஒளியும் (சமமானது) அல்ல. நிழலும், வெயிலும் (சமமானது) அல்ல. உயிருள்ளவையும், இறந்தவையும் சமமானவை அல்ல. நிச்சயமாக […]