சகோதரர் K.M. இக்பால் மதனிக்கு அபூ அப்தில்லாஹ் எழுதிய கடிதம்!

Filed under விமர்சனங்கள்! விளக்கங்கள்!! by

சகோதரர் K.M. இக்பால் மதனிக்கு அபூ அப்தில்லாஹ் எழுதிய கடிதம்!

No responses yet

அகில உலக முஸ்லிம்களின் அதல பாதாள வீழ்ச்சி ஏன்?

Filed under 2013 மே by

இப்னு ஹத்தாது

இதோ இறைவனின் உறுதி மொழிகள் :
தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; முஃமின்களாக இருப்பின் நீங்களே மேலோங்குவீர்கள். (3:139)

நம் தூதர்களையும், நம்பிக்கையாளர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம். முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமையாகும். (10:103)

இறை நம்பிக்கையாளர்களான அவர்களுக்கு உறுதியாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான். (22:38)

……முஃமின்களுக்கு உதவுதல் நம்மீது கடமையாகும். (30:47) Continue Reading »

No responses yet

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Filed under 2013 மே,விமர்சனங்கள்! விளக்கங்கள்!! by


விமர்சனம் :
ஜனவரி 2013 அந்நஜாத் இதழில் வெளிவந்துள்ள வட்டி-வங்கி-முஸ்லிம்கள்! சிந்தனைக்குரியதல்ல. பேராபத்தானது. அல்லாஹ்வும், அவனது தூதரும் வட்டியைப் பற்றி விளக்கிய பின் மாற்றுக் கருத்து கொள்ள எவருக்கும் அனுமதியில்லை. வங்கியில் வட்டியின்றி பணம் சேமிக்க கரண்ட் அக்கவுண்ட் வசதி உள்ளது. நிர்ப்பந்தம் என்ற நிலையானால் பல விஷயங்களை ஆதரிக்க வேண்டி வரும். Continue Reading »

No responses yet

ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானது – ஹராம்!

Filed under 2013 மே by

ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு
முற்றிலும் முரணானது – ஹராம்!
                               அபூ அப்தில்லாஹ்

இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும் :
அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன். (அந்நூர் : 24:30) Continue Reading »

One response so far

பெரியார் விளங்கிக் கொண்ட இஸ்லாம்! (முகமதிய மதம்)

Filed under 2013 மே by

அபூ அப்தில்லாஹ்

அம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயமரியாதைக்காரரின் கடமை!
-பெரியார்

(17.11.1935) “குடி அரசு’ இதழில் எழுதிய தலையங்கம்.
எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். Continue Reading »

No responses yet

“குலா” மூலம் மணவிலக்குப் பெற்ற பெண்

Filed under 2013 மே by

 ”குலா”  மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும்  அதே கணவனை மணப்பது கூடுமா?

ஆத்தூர்.G.S சுல்தான்ஜி, காமராஜனார் சாலை, ஆத்தூர் (சேலம்) 9994112503

முதலில் “”குலா” என்பதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத் திருக்க மாட்டார்கள் என்று நடுவர்களும் அஞ்சும் போது, மனைவியானவர் கணவனிடமிருந்து பெற்றதை திரும்பக் கணவனிடமே கொடுக்கச் செய்து பிரித்து விடுவதில் தவறில்லை என்பதை குர்ஆன் 2:229 மூலம் அறிய முடிகிறது. இப்படிக் கணவனிடமிருந்து பெற்றதை மனைவி திரும்பக் கணவனிடமே கொடுத்துத் திருமண ஒப்பந்தத்தை தானாகவே முறித்துக் கொள்ள முன் வருவது தான் குலா என்பதாகும். Continue Reading »

No responses yet

பலதாரமணம் குர்ஆனில் தடையற்ற விதியல்ல

Filed under 2013 மே by

 டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம்
கேப்டன் அமீருத்தீன்

“”இஸ்லாமிய சமூக வாழ்வில் பலதாரமணம் சில குறிப்பிட்டச் சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள விதி என்பது சட்டவல்லுனர்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்தாகும். அதுவும் குறிப்பாக ஒரு குடும்பத் தலைவர் இறப்புக்கு பின் அவரது குடும்பம் ஆதரவற்று விடப்படும் தருணமே அந்த சூழ்நிலையாகும். குர்ஆனில் பலதாரமணம் ஒரு கட்டாய விதியல்ல; அப்படியே அது அங்கு ஊக்கப்படுத்தப்படவும் இல்லை. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறையே அது. நிபந்தனையுடன் குர்ஆன் அங்கீகாரம் அளிக்கும் பலதாரமணத்துக்கு சுயநலம் அல்லது பாலியல் உணர்வு காரணமாக இருக்க முடியாது. முஸ்லிம் ஆடவர்களின் சமூகக் கடமைகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு வழிமுறையாகும் அது. இஸ்லாமிய சமூகத்தில் நிராதரவாக விடப்படும் கைம்பெண்கள், அநாதைகள் இவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு சமூகத் தீர்வாகவே நாம் அதை நோக்க வேண்டும்”. (பார்க்க: இந்து நாளிதழ் ஜனவரி 2, 2013, பக்கம்12) Continue Reading »

One response so far

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

Filed under 2013 மே by

MTM. முஜீபுதீன், இலங்கை

பிப்ரவரி 2013 தொடர்ச்சி …
அபூஹுரைரா(ரழி) கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும்போது, “”நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் குப்ரின்(இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்” என்று சத்தியம் செய்த இடம் என்றார்கள். “”பனூ ஹாஸிமுக்கும் பனூ முத்தலிபுக்கும் எதிராக “”நபி(ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்” என குறைஷி குலத்தாரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது” என ஸுஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்” (புகாரி: 1590) Continue Reading »

No responses yet

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் அறிவு ஜீவிகள்!

Filed under 2013 மே,தலையங்கம் by

இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான். இந்த உண்மையை இணை, துணை, இடைத்தரகர் இல்லா ஏகனான இறைவன் தனது இறுதி நெறிநூல் குர்ஆனின் அஃராஃப் : 7:175-179 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான். Continue Reading »

No responses yet

3:110, 9:71, 103:1-3 இறைவாக்குகள் கூறும் பிரசார பணி!

Filed under 2013 மே by

பஷீர், புதுக்கோட்டை

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத் தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதை(ச் செய்ய) ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் தடுக்கிறீர்கள். இன்னும், அல்லாஹ் வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடை யோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண் டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர். எனி னும், அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின் றனர். (3:110) Continue Reading »

No responses yet

அந்நஜாத்தின் இலட்சியம்!

Filed under 2008 ஜூன்,தலையங்கம் by

 அந்நஜாத்தின் இலட்சியம்!

1986-ல் அந்நஜாத் ஆரம்பிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதன் ஆரம்ப கால வாசகர்கள் நன்கு அறிவார்கள். அந்த இலட்சியம் என்ன? அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, சுயநலத்துடன் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டு, மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் புரோகித மவ்லவிகளை அடையாளம் காட்டுவது; அவர்களின் முகத்திரையைக் கிழித்து எறிவது; மக்களை அப்புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவிப்பது என்பதே அந்த இலட்சியமாகும். Continue Reading »

No responses yet

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Filed under 2013 ஏப்ரல்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!! by

விமர்சனம் :தனி ஈழப் பிரச்சனை விஸ்வரூப மெடுத்து தமிழ்நாடே கொந்தளிக்கிறது. அது பற்றி முஸ்லிம் பிரிவு இயக்கங்கள் ஆதரித்தும், மறுத்தும் அறிக்கைகள் விடுகின்றன. இதற்கு நேர்வழி காட்டும் அல்குர்ஆன் தீர்வு தருகிறதா?
முஹம்மது பஷீர், புதுக்கோட்டை Continue Reading »

No responses yet

“இஜ்மா” மார்க்க ஆதாரமா?

Filed under 2013 ஏப்ரல் by

அபூ அப்தில்லாஹ்

02.02.2013 சனியன்று திருச்சியில் சைபுத்தீன் ரஷாதிக்கும் ஜைனுல் ஆபிதீன் உலவிக்கும் இடையில் ஒரு விவாதம் இடம் பெற்றது. அதில் சகோ. சைபுத்தீன் ரஷாதி இஜ்மா குர்ஆன், ஹதீஃதுக்குப் பிறகு மூன்றாவது ஆதாரமாக இருக்கின்றது என்றும் சகோ. ஜைனுல் ஆபிதீன் இஜ்மா மார்க்க ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டனர். ஆரம்பத்தில் பீ.ஜை. இஜ்மா மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதற்கு ஆதாரமான குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்தவர் பின்னர் அதில் உறுதியாக நில்லாமல், இஜ்மாவின் பேரால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை பிக்ஹு கிதாபுகளிலிருந்தே எடுத்து அடுக்கடுக்காக வைத்துத் திசை மாறிப் போனார். அதுவும் சைபுத்தீன் ரஷாதிக்குச் சாதகமாகப் போய் விட்டது. Continue Reading »

No responses yet

பீ.ஜை.அன்றும் இன்றும்….

Filed under 2013 ஏப்ரல் by

பீ.ஜை.அன்றும் இன்றும்….
அன்று:    குமுறுகிறார்களாம்! குமுறட்டும்!!

நவம்பர் 1986-ன் மறுபதிப்பு :

நவம்பர் 1986-ன் மறுபதிப்பு :
சென்ற அக்டோபர் 1986 மாத ரஹ்மத் இதழில் “”ஆலிம்கள் குமுறுகிறார்கள்!” என்ற தலைப்பில் அத்திக்கடை & பொதக்குடியைச் சேர்ந்த 18 ஆலிம்களின் கடிதம் ஒன்றை பிரசுரம் செய்திருக்கிறார் அதன் ஆசிரியர். Continue Reading »

No responses yet

நன்மை செய்யப் பணித்தல்! தீமையைத் தடுத்தல்!

Filed under 2013 ஏப்ரல் by

இஸ்லாத்தின் பார்வையில்
நன்மை செய்யப் பணித்தல்! தீமையைத் தடுத்தல்!
முஹிப்புல் இஸ்லாம் Continue Reading »

No responses yet

“ வானத்திலிருந்து ஒரு துண்டை எறிந்து……”

Filed under 2013 ஏப்ரல்,அறிவியல் by

எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.

அல் குர்ஆன் வழியில் அறிவியல்..

அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள்.

முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை பிடித்தது. Continue Reading »

No responses yet

28 ஆம் ஆண்டில் அந்நஜாத்!

Filed under 2013 ஏப்ரல்,தலையங்கம் by

ஆதி, அந்தம், ஈடு, இணை, துணை, தேவை, இடைத்தரகர் எதுவுமே இல்லாத தன்னந்தனியனான, ஏகனாகிய இறைவனான அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபை கொண்டு அந்நஜாத் புரோகித ஒழிப்பு முயற்சியின் 27ஆம் ஆண்டை நிறைவு செய்து விட்டு, 28ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! புரோகித ஒழிப்பு முயற்சி என்பது கல்லில் நார் உரிக்கும் மிக மிகக் கடினமான முயற்சி; நபிமார்கள் செய்த கடும் முயற்சி. எனவே நபிமார்கள் பட்டது போல் அனைத்து வகைத் துன்பங்கள், ஏச்சுப் பேச்சுகள், கல்லடி, சொல்லடி, பேயன், பைத்தியக்காரன், மனநோயாளி, அமானித மோசடியாளன் போன்ற இழி பட்டங்கள் இப்படி அனைத்து வகை அவமானங்களையும் அல்லாஹ்வுக்காக அழகியப் பொறுமையாக (2:45, 153, 3:200, 10:109, 11:115, 16:127, 20:130, 40:55,77, 46:35, 50:39, 70:5, 103:3) பொறுமை காத்துக் கொண்டு சத்தியத்தை-நேர் வழியை மிகமிக உறுதியுடன் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது அந்நஜாத். Continue Reading »

No responses yet

ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்!

Filed under 2002 நவம்பர்,தலையங்கம் by

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது. அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இறைவனது இந்த சட்டதிட்டங்களை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஏற்று நடப்பார்களேயானால், இவ்வுலக வாழ்க்கையே சுவர்க்கலோக வாழ்க்கையாக ஆகிவிடும். Continue Reading »

No responses yet

தலைப்பிறை அறிவிப்பு!

Filed under 2002 நவம்பர்,பிறை by

இஸ்லாமிய ஆய்வு மற்றும் வெளியீட்டு மையம், ஏர்வாடி

2002 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1423 ரஜப் மாதத்துடைய 29ஆவது நாள். அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் டெல்லியில் 12 நிமிடமும் லிபியாவில் 22 நிமிடமும் பிறை இருந்தது. எனவே 2002 அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹிஜ்ரி 1423 ஷஃபான் மாதத்தின் முதல் தேதியாகும். ஷஃபான் மாதத்தின் 14வது நாள் பெளர்ணமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இது கீழ்க்கண்ட நாடுகளில் தெரியும். Continue Reading »

No responses yet

ஐயமும்! தெளிவும்!!

Filed under 2002 நவம்பர்,ஐயமும்! தெளிவும்!! by


ஐயம்: 
காஃபிர்களின் இறப்பு செய்தியைக் கேட்டால் ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ என்று கூறலாமா? கடையநல்லூர், சேமலப்பை இக்பால், (கேம்ப், ஜித்தா)

தெளிவு: முஸ்லிம்கள் இறந்த செய்தியைக் கேட்டால் மட்டுமே “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” எனக் கூறும்படி சொல்லப்படாததாவும், காஃபிர்கள் இறந்த செய்தியைக் கேட்டால் ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ எனக் கூறக்கூடாது என தடை இல்லாதிருப்பதாலும், “துன்பம் ஏற்படும் பொழுது, ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ (அல்குர்ஆன் 2:156) எனக் கூறும்படி பொதுவாகக் கூறப்பட்டடிருப்பதாலும், காஃபிர்கள் இறப்பு செய்தியைக் கேட்டாலும், ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ என தாராளமாக சொல்லலாம் என அறிய முடிகிறது. Continue Reading »

No responses yet

“அமல்களின் சிறப்புகள்”

Filed under 2002 நவம்பர் by

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் புத்தகம்

  ஆய்வுத் தொடர் : 20 – M.அப்துல் ஹமீது, திருச்சி.

“திருக்குர்ஆனின்  சிறப்புகள்” எனும் தலைப்பில் சில சூராக்களை (குறிப்பாக யாசீன் சூரா) சிலாகித்து பல விஷயங்களை ‘அமல்களின் சிறப்புகள்” புத்தகம் எழுதியிருக்கிறது. அவற்றில் மிகைப்படுத்தப்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அப்புத்தக ஆசிரியருக்கு மிகைப்படுத்தப்பட்டவைகள் உறுத்தலாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. எனவே எழுதுவதை எல்லாம் எழுதிவிட்டு ஒரு சில குறிப்பையும் தருகிறார். ஆசிரியரின் அக் குறிப்பாவது: Continue Reading »

No responses yet

நாள் எங்கிருந்து எப்பொழுது துவங்குகிறது என்பது பற்றிய ஆய்வு கட்டுரை

Filed under 2002 நவம்பர்,பிறை by

  பி.முஹம்மது சிராஜுத்தீன், ஏர்வாடி.

பிறையைப் பார்த்து மாதத்தை ஆரம்பிக்க நபி(ஸல்) அவர்கள் ஆணையிட்டிருப்பதால் பிறை பார்க்கும் நேரமான மாலை (மஃரிப் என்பது சூரிய அஸ்தமான நேரம்) நேரத்திலிருந்து நாள் ஆரம்பமாகிறது என்பது பெரும்பாலோரின் கருத்தாகும். எனவே தான், மற்ற நாட்காட்டி காலண்டர் படி பியாழக் இரவை முஸ்லிம்கள் வெள்ளி இரவு என்று அழைக்கின்றனர். ரமழானின் பிறைக் கண்ட நாளில் அன்று இரவே, “ரமழானின் இரவுத் தொழுகை (தராவீஹ்)த் தொழுகின்றனர். ஷவ்வால் மாதத்திற்கான பிறைக் கண்ட நாளில் ரமழானின் இரவுத்(தராவீஹ்) தொழுகை நிறுத்தப்படுகிறது. இவையனைத்தும் மாலை (மஃரிப்) நேரத்திலிருந்து நாள் ஆரம்பமாகிறது என்பதற்கான ஆதாரங்கள் என்றும் வாதிடுகின்றனர். Continue Reading »

No responses yet

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Filed under 2002 நவம்பர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!! by


விமர்சனம்: மார்ச் 2002  அந்நஜாத் இதழில் வந்த விளக்கங்களுக்கு விமர்சனம்.’

1. ஷவ்வால் முதல் நாள் பெருநாள் கொண்டாடித்தான் தீரவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

2. அதற்கு மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை. அதனால் தான் தொழக்கூடாத மாதவிடாய் பெண்கள், தக்க காரணமின்றி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஈத்கா வருமாறு கட்டளையிட்டார்கள். Continue Reading »

No responses yet

காதியானிகளின் ஆகாசப்புளுகு!

Filed under எதிர் வாதம்,காதியானிகள் by

காதியானிகளின் ஆகாசப்புளுகு-1.    ஈஸா(அலை) மரணித்துவிட்டார்கள்.
உண்மை நிலை :   ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை!
ஆயினும் மரணிப்பவர்களே!

“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக இருக்கின்றேன்: நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலைத்திருக்கும்” (என்று கூறினார்) இவர் தாம் மரியமுடைய புதல்வர் ஈஸா ஆவார். இதைக் குறித்துத் தான் அவர்கள் தர்க்கம் செய்கிறார்களே அது பற்றிய உண்மையான சொல் இதுவேயாகும். (19:32,33,34) Continue Reading »

No responses yet

மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்?

Filed under 1996 பிப்ரவரி,எதிர் வாதம்,காதியானிகள்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!! by

விமர்சனம்: அபூ அப்துல்லாஹ்வும், பி.ஜே.யும் தங்கள் சொந்த ஊகங்களாலும், வாதங்களாலும் தான் மிர்ஸா குலாமை நபி இல்லை என்று சொல்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் எதுவும் அவர்கள் சொல்வதில்லை என இங்கு சில காதியானிகள் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லையா? தெளிவுபடுத்தவும்.மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்? அவர்களுடைய போலி முகத்திரையை கொஞ்சம் கிழித்துக் காட்டுங்களேன். அவர்களுடன் அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தியதில் தாங்கள் பெற்ற படிப்பினை என்ன? விளக்கவும். P.K முஹம்மது ஜவாஹிர், கோயமுத்தூர். Continue Reading »

No responses yet

Older Entries »