அறிந்து கொள்வோம்!

in 2023 ஜனவரி

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

  1. மனிதன் எதில் சூழ்ச்சி செய்கிறான் என அல்லாஹ் கூறுகிறான்?
    அல்குர்ஆனின் வசனங்களில்.    அல்குர்ஆன் 10:21.
  2. அல்லாஹ் யாருக்கு உரிமையை வழங்க கூறுகிறான்?
    உறவினர், வறியோர், வழிப்போக்கர்.    அல்குர்ஆன் 17:26
  3. அநாதைகளின் சொத்தை எதுவரை நெருங்க வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்?
    பருவமடையும் வரை நல்லவிதமாகவே அன்றி நெருங்காதீர்கள்.    அல்குர்ஆன் 17:34
  4. வானத்தில் கோள்களை எதற்காக அமைத்தேன் என அல்லாஹ் கூறுகிறான்?
    பார்ப்போருக்கு அலங்காரமாக தெரிவதற்கு.    அல்குர்ஆன் 15:16
  5. லஃனத் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    சாபம்.    அல்குர்ஆன் 2:89
  6. எதனை செலவு செய்யுமாறு அல்லாஹ் கூறுகிறான்?
    நல்லவற்றையே.    அல்குர்ஆன் 2:267
  7. ஸாலிஹீன்கள் என்றால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
    நல்லடியார்கள்.    அல்குர்ஆன் 3:114
  8. பஹீரா என்றால் எது என்று அல்லாஹ் கூறுகிறான்?
    காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்.    அல்குர்ஆன் 5:103
  9. நம்மைச் சார்ந்தவனில்லை என்று யாரை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    துன்பத்தின் காரணமாக கன்னத்தில் அறைந்து கொள்பவன். அப்துல்லாஹ் (ரழி), புகாரி. 1297
  10. ஜனாஸாவைக் கண்டால் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    உங்களை கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள். ஆமிர் இப்னு ரபிஆ(ரழி), புகாரி: 1307, 1308
  11. உலக வாழ்வின் சுகப் பொருள்கள் எது என்று அல்லாஹ் கூறுகிறான்?
    பெண்கள், ஆண் மக்கள், தங்கம், வெள்ளியின் பெரும் குவியல்கள்.    அல்குர்ஆன் 3:14
  12. அஸா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    கைத்தடி.   அல்குர்ஆன் 7:117
  13. அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்பவருக்கு எதை உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்?
    நாயை உதாரணமாக கூறுகிறான்.  அல்குர்ஆன் 7:176
  14. துணைவியை எதற்காக படைத்தான் என அல்லாஹ் கூறுகிறான்?
    கணவன் அமைதி பெற.    அல்குர்ஆன் 7:189
  15. தபூக் போருக்கு செல்லாதவர்களிடம் எதனை கூறும்படி நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கூறினான்?
    இம்மையின் உஷ்ணத்தை விட நரக நெருப்பின் உஷ்ணம் அதிகம்.    அல்குர்ஆன் 9:81
  16. அல்லாஹ்விடம் தோழர்களில் சிறந்தவன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
    தனது தோழனிடத்தில் சிறந்தவனே.    திர்மிதி 1944
  17. ஸூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகளின் கண்கள் எவ்வாறு இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்.
    நீலம் பூத்த கண்களாக இருப்பர்.    அல்குர்ஆன் 20:102
  18. ஸூஹுப் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    ஏடு(வேதம்)    அல்குர்ஆன் 53:36
  19. ´ஃரா என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    நட்சத்திரம் (கோள்)    அல்குர்ஆன் 53:49
  20. வகீல் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
    பொறுப்பாளர்.    அல்குர்ஆன் 17:54

Previous post:

Next post: