அறிந்து கொள்வோம்!

in 2025 பிப்ரவரி

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. இறப்பின் நெருக்கத்தில் இருப்பவருக்கு நாம் எதை நினைவுபடுத்தவேண்டும் என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

லாஇலாஹஇல்லல்லாஹ்என்றுநினைவுப்படுத்தவேண்டும்.  முஸ்லிம்: 1672

2. இறை நம்பிக்கையில் பாதி என்று எதை நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

தூய்மை :  முஸ்லிம் : 381

3. எந்த நபியுடைய சமுதாயத்தினர் மானக்கேடான செயல்களை செய்தனர் என அல்லாஹ்  கூறினான்?

லூத்  நபியின்  சமுதாயத்தினர்.   அல்குர்ஆன் 29:28

4. ஹிஜ்ரத் என்ற நிகழ்ச்சி நடந்திராவிட்டால் நான் யாரில் ஒருவனாக இருந்திருப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அன்சாரிகளில்  ஒருவனாக.   புகாரி: 4330

5. இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரினரை விட்டு எதை நீக்கி விடுவதாக  அல்லாஹ்  கூறுகிறான்?

தீமைகளை.     அல்குர்ஆன் : 29:7

6. யாருடைய சொத்துக்களையும், நம்முடைய சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்  என  அல்லாஹ்  கூறுகிறான்?

அநாதைகளின்சொத்துக்கள்.     .கு. 4:2

7. இந்த உலகத்தில் யாரைப்போன்று இருக்க நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

வழிப்போக்கனைப்போன்று. புகாரி: 6416

8. சூர் ஊதப்படும் நாளில் மக்கள் எப்படி வருவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? கூட்டம் கூட்டமாக.    அல்குர்ஆன் 78:18

9. அவர்கள் என்னை சேர்ந்தவர்கள், நான் அவர்களை சேர்ந்தவன் என்று எந்த குலத்தாரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?

அஷ்அரீகுலத்தார்.  புகாரி : 2486

10. யார் ஒரு அங்குல அளவுள்ள நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ அவருடைய கழுத்தில் எந்த அளவுக்கு மாலையாக மாட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஏழு  நிலங்கள்  அளவுகள்.   புகாரி : 2453

11. தனியாக  தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது எத்தனை மடங்கு அதிகச் சிறப்பு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

27 மடங்கு.   முஸ்லிம் : 1151, 1152

12. தொழுகை அழைப்பை (பாங்கு) செவியுற்றால் நம்மை என்ன செய்யவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அதைப்போன்றேகூறவேண்டும். முஸ்லிம்:627,628

13. கண்ணியம் யாருக்கு உரியது என அல்லாஹ் கூறுகிறான்?

தனக்கே(அல்லாஹ்வுக்கே).     .கு.10:65

14. “மூபிகாத்என்றால் என்ன? 

பேரழிவைஏற்படுத்துபவை.   புகாரி:6492

15. நபி(ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்கள் எத்தனை?

19 போர்கள். அபூ இஸ்ஹாக்(ரஹ்)   புகாரி: 3949

16. உமய்யா இப்னு கலஃப் எந்த போரில் கொல்லப்பட்டான்?

பத்ருப்போரில்.  புகாரி: 3950

17. அபூஜஹ்லை கொன்றவர் யார்?

மூஆத், முஅவ்வித் என்ற சிறுவர்கள்.  புகாரி: 3964

18. பத்ருப் போரில் எதிரிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

ஆயிரம்பேர்.   முஸ்லிம்: 3621

19. அகழ் போரில் சஅத்பின் முஆத்(ரழி) அவர்களின் கை நரம்பில் அம்பெய்தவன் யார்?

இப்னுல்அரிகா.  முஸ்லிம் : 3628

20. நபி(ஸல்) அவர்கள் வெற்றி நாளில் மக்காவினுள் நுழையும்போது கஅபாவை சுற்றிலும் எத்தனை சிலைகள் இருந்தன?

360 சிலைகள்.  முஸ்லிம் : 3650

Previous post:

Next post: