2013 மே

இப்னு ஹத்தாது இதோ இறைவனின் உறுதி மொழிகள் : தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; முஃமின்களாக இருப்பின் நீங்களே மேலோங்குவீர்கள். (3:139) நம் தூதர்களையும், நம்பிக்கையாளர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம். முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமையாகும். (10:103) இறை நம்பிக்கையாளர்களான அவர்களுக்கு உறுதியாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான். (22:38) ……முஃமின்களுக்கு உதவுதல் நம்மீது கடமையாகும். (30:47)

ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானது – ஹராம்!                               அபூ அப்தில்லாஹ் இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும் : அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன். (அந்நூர் : 24:30)

 “குலா”  மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும்  அதே கணவனை மணப்பது கூடுமா? ஆத்தூர்.G.S சுல்தான்ஜி, காமராஜனார் சாலை, ஆத்தூர் (சேலம்) 9994112503 முதலில் “”குலா” என்பதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத் […]

MTM. முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2013 தொடர்ச்சி … அபூஹுரைரா(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும்போது, “”நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் குப்ரின்(இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்” என்று சத்தியம் செய்த இடம் என்றார்கள். “”பனூ ஹாஸிமுக்கும் பனூ முத்தலிபுக்கும் எதிராக “”நபி(ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்” என குறைஷி குலத்தாரும் […]

இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான். இந்த உண்மையை இணை, துணை, இடைத்தரகர் இல்லா ஏகனான இறைவன் தனது இறுதி நெறிநூல் குர்ஆனின் அஃராஃப் : 7:175-179 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான்.