2014 ஆகஸ்ட்

அபூ அப்தில்லாஹ் சர்வ வல்லமை மிக்க எல்லாம் வல்ல இறைவன், என்று மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பினானோ அன்றிலிருந்தே மனிதனுக்குரிய வாழ்க்கை நெறியை தெளிவாக நேரடியாக இடைத்தரகர்களின் மேல் விளக்கம் தேவைப்படாத நிலையில், அதை நடைமுறைப்படுத்திக் காட்டத் (Practically)  தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வஹி மூலம் அறிவித்துக் கொண்டிருந் தான். அந்த அறிவிப்புகளின்படி தான் மனிதன் நடக்க வேண்டும். அப்படி நடப்பவர்கள் மட் டுமே சுவர்க்கம் நுழைய முடியும். அப்படி வஹி மூலம் தெளிவாக அறிவிக்கப்பட்ட ஒரே நேர் […]

இப்னு ஹத்தாது. கட்டாயக் கடமையான ஐங்காலத் தொழுகைகளையும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, மறுமையில் அதற்குரிய கூலியை எதிர்பார்த்துத் தொழ வேண்டிய, இமாமத் செய்ய வேண்டிய மவ்லவிகள், அந்தத் தொழுகைகளை அற்பமான காசுக்கு இங்கேயே விற்று விடுவதால் நாளை மறுமையில் தொழுகையற்றவர்களாகவே தண்டனைக்குரியவர்களாகவே எழுப்பப்படுவார்கள் என்பதை குர்ஆன் 2:41, 79, 174-176, 3:187 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. தூய எண்ணத்துடன் (இஃலாஸ்) அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அல்லாஹ்விடம் கூலியை-சம்பளத்தை எதிர் பார்த்துத் தொழ வைத்தால் அல்லவா நபி வழியைப் பின்பற்றித் […]

அபூ ஃபாத்திமா அல்குர்ஆன் அல்அஹ்ஸாப் : 33:56-ல் அல்லாஹ் கூறுகிறான். இத்தூதரின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான். வானவர்களும் அவருக்காக அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவருக்காகப் பிரார்த்தித்து அமைதியையும் வேண்டுங்கள்! (33:56) இந்த இறைவாக்கு இறங்கியவுடன் நபி தோழர்கள் ஸலவாத் எப்படிச் செய்வது என்று கேட்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத் துஆ இதுதான்.