2014 ஜனவரி

இப்னு ஸதக்கத்துல்லாஹ் 7:163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டு வீராக! சனிக்கிழமையன் று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன.சனிக்கிழமை அல்லா த நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ் வாறு அவர்க ளைச் சோதித்தோம்.7: 164. “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது க டுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என் று அவர்களில் ஒரு […]

அபூ அப்தில்லாஹ், ததஜவினரின் வசூல் வேட்டை தூள் கிளப்புகிறது. உள்நாடு வெளிநாடு என சூடு பறக்கிறது. மத்தியில் 10% விழுக்காடும், மாநிலத்தல் 7% விழுக்காடும் முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுத் தரப் போகிறார்களாம். உண்மை நிலை என்ன? குர்ஆன், நபி வழி என்ன சொல்கிறது? பார்ப்போம். அல்லாஹ்வே உணவளித்துக் கொண்டிருப்ப வன். வல்லமை மிக்கவன், உறுதி மிக்கவன். (51:58) “”…அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாகத் திரியாதீர்கள். (2:60) (ததஜவினர் குழப்பம் செய்கின்றனர் )

இப்னுஸதக்கத்துல்லாஹ் தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவன்) என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது, அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும். என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

விமர்சனம் : நீங்கள் ஒட்டுமொத்த மவ்லவிகளையும் மிகக் கடுமையாக விமர்சிப்பதாகவும், அவர்களிலும் சிலர் நல்லவர்களாக 6:153 குர்ஆன் வசனக் கட்டளைப்படி நேர்வழி நடப்பவர்களாக இருக்கவும் கூடும் எனப் பலர் உங்களைக் குறை கூறுகிறார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன? ஷாஜஹான், சுப்ரமணியபுரம். விளக்கம்: அந்நஜாத் ஒவ்வொரு மாத இதழின் 2-ம் பக்கத்தில் “”மார்க்கத்தை உள்ளது உள்ளபடிச் சொல்லும் அரபி மொழி ஆணவம் பேசாத, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாத நபிமார்களின் வாரிசுகளை விமர்சிக்காமல் முழு மரியாதை செலுத்துகிறோம்” என்று […]

MTM. முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2013 தொடர்ச்சி…. இஸ்லாத்தில் பலதாரமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி : அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்). அல்லது உங்கள் வலக் கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே […]

ஐயம் : விரலசைத்தல் பற்றி சர்ச்சையாக இருக்கும் பட்சத்தில் மக்கள் எதை தேர்ந்தெடுப்பது? M.F முன்ஷிசந்தா, பி.ஏ., பாண்டிச்சேரி தெளிவு : மக்களிடையே கருத்து வேறுபாடு வந்து விட்டால் எப்படிச் செயல்படுவது என்பதற்கு 4:59 அல்குர் ஆன் வசனம் தெளிவான வழிகாட்டலைக் கூறுகிறது. அவரவர் அபிப்பிராயத்தை விட்டு குர்ஆன், ஹதீஃத் பக்கம் மீண்டுவிட வேண்டும். “”சந்தேகமானதை தொடர வேண்டாம்” என்ற 17:36 அல்குர்ஆன் வசனமும் “”சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்று விடு” என்ற புகாரியில் காணப்படும் ஹதீஃதும் […]

முஹம்மது நஸீர், ஜாக் நெல்லை மாவட்ட நிர்வாகி, செல்: 9994027895 சர்வதேசப் பிறை நிலைப்பாடு மார்க்கம் ஆதாரமுள்ளதா? அறிவுப்பூர்வமானதா? சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன் சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக் கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமது பகுதி பிறை மற்றும் மண்டல மாநில தேசியப் பிறை நிலைப்பாடுகளிலிருந்து முன்னேற்றம் அடைந்து, நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர். எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாடு சரியானதுதானா? அறிவுப்பூர்வமானதுதானா? […]

நடந்து முடிந்த ஏற்காடுத் தொகுதிச் சட்டமன்ற இடைத் தேர்தலில் இடம் பெற்ற அராஜகங்கள், அட்டூழியங்கள் லஞ்ச லாவண்யம், வாக்காளர்களுக்குப் பணம் மட்டுமல்ல, மது பாட்டில்கள் விநியோகம் என சகல முறை கேடுகளும், ஒழுங்கீனங்களும் நிறைவாக நிறைவேறியுள்ளன. வாக்காளப் பெருமக்களைப் பெரும் குடிகாரர்களாக மாற்றும் பெரும் சேவையும் வேட்பாளர்களால் மிகுந்த அக்கறையுடன் அரங்கேறியுள்ளன. தலைமைத் தேர்தல் அதிகாரியே இவற்றை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை எனக் கையை விரித்துள்ளார். பொறுப்புச் சாட்டப்பட்ட, அதற்காகப் பெருத்த அதிகாரம் பெற்ற தேர்தல் […]