2007 நவம்பர்

  நாட்டின் பெரும்பான்மையினர் விரும்பி தேர்ந்தெடுக்கும் ஆட்சியே என பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆட்சியில் அமரும். எவரும்,மக்கள் சொல்வது போல் நாட்டின் பெருன்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தேர்தலில் பெரும்பாலும் மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளும் பல வேட்பாளர்களைக் கொண்டு சிதறடிக்கப்படுகிறது. M.L.A., M.P., பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பெறும் வாக்குகள், அவரை எதிர்த்த மற்ற வேட்பாளர்கள் அனைவரின் வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இறுதியில் […]

அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.