2007 மே

 குறிப்பு : குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்க முற்பட முன்னர் எழுதப்பட்ட கடிதமாகும் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ்ரத்ஜீக்கு எழுதப்பட்ட கடிதம் ஹிஜ்ரி 10.2.1398 பெருமதிப்புக்குரிய ஹஜ்ரத்ஜீ அவர்களின் உயர் சமூகத்திற்கு, ஷாஹுல் ஹமீது (அபூ அப்தில்லாஹ்) பணிவுடன் எழுதியது. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நலம். நலமே நாட்டம்.

மறுபதிப்பு : கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில உலக அளவில் தப்லீஃக் பணி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே: இந்தப் பணி மூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களிடையே ஓரளவு மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.

பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி

  அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட அறிவாற்றல் மிக்கவர்களா மவ்லவி புரோகிதர்கள்? மனிதனைப் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ், மனிதனின் இவ்வுலக வாழ்க்கை நெறியை, பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி மூலம் கற்றுக் கொடுத்தான். இறைத் தூதர்கள் அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். அவற்றில் இறைத்தூதர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளைப் புகுத்தவில்லை. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.