அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட அறிவாற்றல் மிக்கவர்களா மவ்லவி புரோகிதர்கள்? மனிதனைப் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ், மனிதனின் இவ்வுலக வாழ்க்கை நெறியை, பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி மூலம் கற்றுக் கொடுத்தான். இறைத் தூதர்கள் அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். அவற்றில் இறைத்தூதர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளைப் புகுத்தவில்லை. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.
அபூ அப்தில்லாஹ் தொடர்: 11 இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? [PDF]
புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்., அல் – அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம். மனிதர்களுள் நன்மையை ஏவும் ஒரு குழு இருப்பதைப் போல், நன்மைகளைத் தடுத்து, தீமைகளை நன்மைகளைப்போல் உருவகப்படுத்தி மக்கள் சமுதாயத்தைப் படுகுழியில் வீழ்ச்சியுறச் செய்வதில் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டே உள்ளது. அதுதான் “சுயநலக் கும்பல்”! எங்கே தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி, உண்மைகளை மறைத்து, பொய்களை இட்டுக்கட்டி – சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் குளிர்காய்ந்து, தங்களின் வளமான வாழ்வைத் […]
முஸ்லிம் சமுதாயம் இன்று முழுக்க முழுக்க தங்களை மார்க்க அறிஞர்கள் என்று ்சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் – மவ்லவிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த மவ்லவிகளின் தாக்கமும், ஆதிக்கமும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அவர்களின் பிடியிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை விடுவிப்பது நடக்கக்கூடிய காரியமல்ல. எனவே உங்களின் இந்த முயற்சி வீண் முயற்சி. இதை விடுத்து வேறு உருப்படியான காரியங்களைச் செய்துவிட்டுப் போகலாம் என்று பலர் (அவர்களில் மெத்தப்படித்த அறிவு ஜீவிகளும் அடக்கம்) எமக்கு அறிவுரை கூறிவருகிறார்கள்.
ஐயமும்! தெளிவும்!! [PDF]
K.M.H அபூ அப்தில்லாஹ் அஹ்மதியா இயக்கம்!
குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் பிடித்துக்கொள்! [PDF]
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: கோபத்தில் அல்லாஹ், ரசூல் மேல் ஆணையாக ‘இன்னாருக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன்’ என்று சொல்லி விட்டேன் இதற்கு விளக்கம் தரவும்?
மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா? ஏ.என்.குத்புத்தீன், பி.ஏ.,
முகம்மது அலி, M.A., திருச்சி. நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும் என்று சென்ற இதழில் கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம்.
* நஜாத் ஆசிரியர், “சமாதான வழி” ஆசிரியரை நேருக்கு நேர் சில விஷயங்களைப் பேசிக்கொள்ள அழைத்ததாகவும், “சமாதான வழி” ஆசிரியர் “பத்திரிகை வாயிலாகவே அதை வைத்துக் கொள்ளலாம்” என்று பதில் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாரே! நீங்கள் முன் வரலாமே! A.ரபீவுல்லாஹ்(+2 இறுதி) சேரன்மாதேவி
அஹ்ல குர்ஆன் இயக்கம்! “அஹ்லகுர்ஆன்” – குர்ஆன் மட்டுமே மார்க்கம்; ஹதீஸ் அவசியமே இல்லை என்று கூறும் ஒரு பிரிவினரும் முஸ்லிம்களில் இருக்கின்றனர். இவர்களின் கொள்கை பற்றி ஆராயும்போது, குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளது; ஹதீஸ்கள் பதிந்து பாதுகாக்கப்படாததால் அவற்றில் கலப்படம் ஏற்பட்டுவிட்டது. ஹதீஸின் பெயரால் இலட்சக்கணக்கான கற்பனைக் கதைகள் இட்டுக் கட்டப்பட்டுள்ளன. அதனால்தான் சமுதாயத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டு விட்டன.
அபூமுஹமத் நஜ்ம் – ஓமன் இரகசியமாகவும், பகிரங்கமாகவும், அல்லாஹ்வுக்காக! அல்லாஹ்வு டைய தூதர் நபிஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக! அல்லாஹ் தனக்கு தந்ததிலிருந்து உதவுபவர்கள் யார்? யாருக்காக? தன் சுயநலத்திற்காகவா? அல்லது தான் மக்களால் புகழப்பட வேண்டும். பெரு மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற் காகவா? பெரும் செல்வந்தர்களே நல் உள்ளம் கொண்டோர்களே, எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று சொல்லக்கூடிய அன்புள்ளம் கொண்ட முஸ்லிம்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனக்காக கோடி கோடியாக, இலட்ச […]
கேள்வி: “அல்குர்ஆன் அல்பகரா 2:102-ல் வரும் ஹாரூத், மாரூத் இரண்டு மலக்குகள் என்று நீங்களும், மற்றும் குர்ஆன் தமிழுரைகளும் கூறுகின்றன. ஆனால் பி.ஜைனுல்ஆபிதீன் ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்கள் என்று கூறுகிறார். அவரது குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் எழுதியுள்ளார். இந்த இரு கருத்துக்களில் எது சரியானது; விளக்கவும். எம்.எஸ். சையது அஹமது, ரியாத்.
மத்ஹபை நோக்கி….!
நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்! இரு பிரிவினர் : இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம். அவர்களில் ஒரு கூட்டம் இறைவனையும் மறுமையையும் மறுக்கும் கூட்டம். வாழ்க்கை வாழ்வதற்கே, ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம். தம் மனம் சரி என்று கருதுவதையே காண்பதையே வாழ்க்கையாகக் கருதி, வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுவோம். அதன் பின் ஒரு வாழ்க்கை இல்லை! என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று […]
இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை! மனித நேயத்திற்கு முட்டுக்கட்டை புரோகிதமே! பல பொய்க் கடவுள் வழிபாட்டைத் திணிப்பது புரோகிதமே! மூட நம்பிக்கைகளை வளர்ப்பது புரோகிதமே! ஒரே மனித இனத்தில் பிளவுகளை தோற்றுவிப்பது புரோகிதமே! புரோகிதம் பஞ்சமா பாவங்களை விட பெரும் பாவம்! கொடிய ஹறாம் (கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது) இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களைப் புகுத்துவது புரோகிதமே! நாத்திகத்தை வித்திட்டு நீர்ப்பாய்ச்சி உரமிட்டு வளர்ப்பது புரோகிதமே! புரோகிதம் ஒழிந்தால் மனிதம் மலரும்! மனித நேயம் […]
மார்க்க அறிஞர்களின் சிந்தனைக்கு! [PDF]
அல்குர்ஆன் வழியில் அறிவியல்… S.ஹலரத் அலி, ஜித்தா அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.
“ஹிஜாப்” -“பர்தா” அபூ அப்தில்லாஹ் இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முக்காட்டைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள்(யாரென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (33:59)