ஒன்று சேர்க்கப்படும் நாள் (The day of Resurrection) மறு பதிப்பு : இப்பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நம்மை அல்லாஹ் படைப்பினங்களிலே சிறந்த படைப்பாகப் படைத்து அதிலும் ஒப்பற்ற மார்க்கமாகிய இஸ்லாத்தை நம் உயர் வாழ்க்கை நெறியாக பின்பற்றச் செய்தானே அது அவன் நமக்குச் செய்த மாபெரும் கிருபை! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களாகிய நாம் சில அடிப்படை விசயங்கள் மீது நம்பிக்கை கொள்கிறோம். அவை அல்லாஹ்வை நம்புதல், அவனால் இறக்கியருளப்பட்ட நெறிநூல்களை நம்பு தல் அவனால் அனுப்பப்பட்ட […]
annajaath
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓர் இறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “இஸ்ராயீல்” என்னும் “சிரியாக்” அல்லது ஹீப்ரு மொழிச் சொல்லுக்கு (இஸ்ரா+ஈல்) அல்லாஹ்வின் அடிமை என்பது பொருள் வழக்கில் உள்ளது. இது இறைத்தூதர் யஃஅகூப்(அலை) அவர் களைக் குறிக்கும். “பனூ இஸ்ராயீல்” என்பதற்கு யஃஅகூபின் மக்கள், அல்லது யஃகூ பின் வழித்தோன்றல்கள் என்று பொருளாகும். இதன்படி “பனூ இஸ்ராயீல்” என்பது இஸ்ரவேலர்களைக் குறிக்கும். […]
மரணத்தை விட கொடூரமானது? அபூ அஹமது இப்ராஹீம், ஒரத்தநாடு இந்த கடிதம் கொண்டுவரும் நபரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப் புங்கள்… என்னிடம் டீ/காபி குடிக்கக் கூட காசு இல்லை. ஒரு டீ வாங்கித்தர முடியுமா?…. எனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவரிடம் போகனும்; உதவி செய்யுங்கள்!… மேற்கண்ட வார்த்தைகளை நம்மில் பலர், பல நேரங்களில் சாலையிலும், பள்ளிவாசலிலும் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தாம். இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர்களில் சிலர் இதே வேலையாகவும் பிழைப்பாக்கிக் கொண்ட உள்ளவர்களாக இருக்கலாம். அல்லது […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. ஆதம் நபி அவர்கள் மன்னிப்பு கேட்பதற்குரிய வார்த்தைகளை யாரிடம் கற்றுக்கொண்டார்கள்? அல்லாஹ்விடம். அல்குர்ஆன் 2:37 2. நோன்பாளிகள் எந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? ரய்யான்வாசல். புகாரி : 3257 3. நபி(ஸல்) அவர்கள் எந்த வாகனத்தில் மிஹ்ராஜ் பயணம் செய்தார்கள்? புராக். புகாரி : 3207 4. நபி ஈஸா(அலை) அவர்களின் மற்றொரு பெயர் என்ன? மஸீஹ். அல்குர்ஆன் 3:45 5. நபி(ஸல்) அவர்கள் […]
அமெரிக்காவில் இருப்பது வெள்ளை மாளிகையா? (WHITE HOUSE) N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு. பொதுவாக உலகில் ஒரு வீட்டையோ அல்லது நினைவாலயமோ கட்டினால் அதற்கு அவரவர்கள் விரும்பும் பெயரை சூட்டுவது வழக்கம். உதாரணமாக : “நூர் மன்ஜில்‘ என்று தான் கட்டிய வீட்டிற்கு பெயராக சிலர் வைத்திருப்பதாக பார்த்திருக்கலாம். அதுபோல் மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ்–ன் நினைவாக தான் கட்டிய கட்டிடத்திற்கு “தாஜ்மஹால்‘ என்று பெயர் சூட்டினார். இதுபோல் இன்னும் ஏராளமான பெயர்கள் உலகில் கட்டிடங்களுக்கு […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : சூரிய கிரகணம் என்றால் நாளைக்கு (ஹிபுவீUயூபுஸிஸிக்ஷு) இயல்பாகவே புதிய பிறை ஒன்று தான் என்று நபியவர்கள் சொல்ல வில்லையே! ஏன்? தெளிவு : “”இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது; தொழுகைக்குத் தயாராகுங்கள் என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.’’ அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறி வித்தார்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸ லாத்து ஜாமிஆ (தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. (புகாரி: 1045) […]
தலையங்கம் : வளம் நாடு!-வய(ல்)நாடு! வாழ்வும்!-வீழ்வும்! சென்ற ஜூலை 31ம் தேதி வயநாட்டில் நடந்த நிலச்சரிவு. ஆரம்பத்தில் BREAKING NEWS ஆக இருந்தது. பிறகு அதுவே TRENDING NEWS ஆக ஆனது. இப்போது அது OLD NEWS ஆக மாறிவிட்டது. அதாவது சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக கடந்து போவது என்பது மனித இயல்பில் அரிதாக இருந்தது. ஆனால் சுமார் 2000மாவது ஆண்டுக்கு பிறகு டி.வி. மற்றும் அனைத்து வகையான ஊடகங்களின் (MEDIA) வளர்ச்சியால் […]
புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாகும் காரணம் என்ன? அபூ கதீஜா அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்) வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9) நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (புரோகிதர்களான) பாதிரிகளிலும், துறவிகளிலும் அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் […]
சொந்த வீடா? வாடகை வீடா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மனிதர்கள் முதல் அனைத்து வசதிகளையும் பெற்ற மனிதர்கள் வரை சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் இலட்சியத்தில் ஒன்றாக உளளது. இந்த இலட்சியம் நினைவாகிப் போனவர்களின் எண்ணிக்கையை விட கனவாகப் போனவர்களின் எண்ணிக்கையே அதிகம். “இளமையோ / முதுமையோ, பகலோ / இரவோ, தனியாகவோ / துணையாகவே, வசிப்பதற்கு ஒரு வீடு அவசியம் தேவை. 1. உண்ண உணவும், 2. உடுத்த […]
எப்படி முடியும்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, முஸ்லிம்கள் சோதனையான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மீது அமெரிக்கா, சியோனிசம் (யூதர்கள்) ஏகாதிபத்தியவாதிகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். அதுபோல் இந்தியாவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம்கள் மீது பன்முகத் தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் முஸ்லிம்களில் உள்ள மிகச் சிறிய தீவிரவாத சிந்தனையாளர்களின் நடவடிக்கையின் காரணமாகவும் முஸ்லிம்கள் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவிக்கின்றார்கள். இறைவன் தன் வழிகாட்டும் நூலில் கூறிய கீழ்கண்ட வசனம் இந்த சூழ்நிலையில் […]
உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும்— அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. எனது தந்தை அபூதாலிப் இறந்தபோது நான் நபி(ஸல்)அவர்களிடம் நபியே! வயது முதிர்ந்தவரும் முஸ்லிம் அல்லாதவருமான உங்களுடைய பெரிய தந்தையார் அபூ தாலிப் இறந்துவிட்டார் என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள், நீர் சென்று உம்முடைய தந்தையை அடக்கம் (மட்டும்) செய்துவிட்டுப் பின்னர் வேறெந்த (விதமான) வேலையிலும் ஈடுபடாமல் அப்படியே என்னிடம் வாரும் என்று […]
இரவு உணவு எப்பொழுது? எது? M. சையது முபாரக், நாகை. நாம் உட்பட பல உயிரினங்கள் விடிவதற்கு முன் விழித்து, சூரியன் மறைந்தபின் முன்னிரவில் உறங்கும் விதத்தில் அல்லாஹ் வால் படைக்கப்பட்டிருக்கிறோம். அல்லாஹ் சிலவற்றை இரவில் விழித்து பகலில் தூங்கக் கூடியதாக படைத்திருக்கின்றான். நாம் என்று மின் விளக்குகளை கண்டுபிடித்தோமோ அன்றிலிருந்து இயற்கையை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன், ஆரவாரத்துடன் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து விட்டோம். அதன் விளைவாக உடல் உபாதைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இரவு உணவு எப்போது? […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. அநாதைகளின் சொத்தை அநியாயமாக விழுங்குபவனின் நிலை என்னவாகும் என அல்லாஹ் கூறுகிறான்? அவனதுஉணவு (மறுமையில்) நெருப்பாகும். (அல்குர்ஆன் 4:10) 2. கருக்கலைப்பு (குடும்பக் கட்டுப்பாடு) செய்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறுவது என்ன? வறுமைக்குஅஞ்சிகுழந்தைகளைகொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 6:151,17:31) 3. வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு என்று அல்லாஹ் கூறும் வசனம் எது? அல்குர்ஆன் 35:1 4. ஏழு இரவுகள், எட்டு பகல்களும் தொடர்ந்தாற் போல் வேதனை பெற்ற சமூகம் எது என்று அல்லாஹ் […]
(கடவுளை) இறைவனை பார்க்கவும், பேசவும் முடியுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இறைவனை மனிதர்கள் நேரிடையாக பார்க்கவும், பேசவும் முடியாதா? இந்த கேள்வி ஒன்றும் புதிது அல்ல; இது காலம்–காலமாக கேட்கப்பட்டு வருவது தான். இதற்கு காரணம் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்பக்கூடியவர்களாக சிலர் இருந்ததால், இருப்பதால் வந்தது. இந்த கேள்வியை இறைவனை நம்பாதவர்கள் மட்டும் கேட்கவில்லை. இறைவனை நம்பக்கூடியவர்களுக்கும் இந்த சந்தேகம் உள்ளது. இறைவனை நாம் கண்ணால் இந்த உலகில் பார்க்க முடியாது. “பார்வைகள் அவனை அடையமுடியா; […]
பரிந்துரை (ஃபாஅத்) RECOMMENDATIONபயன் தருமா? பயன் தராதா? A.N. திருச்சி இறைநூலான குர்ஆன் என்பது அல்லாஹ் வின் திருவாக்கு! எவ்வாறு என்றால், “நமது அடியாருக்கு(முகம்மது நபிக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, அதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உதவியா ளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்‘’ (அல்குர்ஆன் 2:23) மேற்கண்டவாறு குர்ஆன் (இறைநூல்) சவால் விட்டு சுமார் 1445 ஆண்டுகள் கடந்து 1446ம் ஆண்டு நடக்கிறது. […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… அல்லாஹ் அருளிய தூய இறைநூலை மூடி மறைத்தார்கள்: அல்லாஹ் அருளிய இறைநூலை மூடி மறைத்து அதற்குப் பதிலாகச் சொற்ப விலையைப் பெறுவோர் தங்களது வயிறு களில் நெருப்பைத் தவிர வேறெதையும் உட்கொள்வதில்லை. (2:174) என்பதற்கு, அரபு மக்களின் மூதாதையர்களைப் புகழ்ந்து பேசி அவர்களிடமிருந்து பெற்று வந்த அற்பமான […]
திரைமறை வாழ்க்கை! (ஆலமுல் பர்ஸக்) அபூ நாஃபிஆ, உடன்குடி வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான கலை. அப்படிப்பட்ட கலையை நுட்பமாக முழுவதுமாக அனுபவித்தால் தானே அதன் அருமை தெரியும்…? வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத்தானே…? நாம் வாழக்கூடிய குறைந்த அளவு காலத்தில் நம்முடைய விருப்பப்படி என்னென்ன விதமான ஆடை களை உடுத்த வேண்டுமோ அதை எல்லாம் உடுத்தி, எந்தெந்த இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று, அனைத்து சுகங்களையும் அனுபவிக்கலாம். நல்ல வழியில் சம்பாதித்தாலென்ன, பிறரிடம் கொள்ளையடித்து சம்பாதித்தாலென்ன […]
மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும், துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்! அபூ அப்தில்லாஹ் அறியாமை நிறைந்த சமுதாயங்களில் மக்கள் உறுதி வாய்ந்தவர்களாகக் காணப் பெற்றாலும் அவர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள் தாம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களின் பலகீனத்தை எதிர்த்துச் செயல்பட முடியாது. மிகவும் கண்டிப்பான கொள்கை களைக் கடைப் பிடிப்பவர் என அறியப்பட்ட வரும் கூட தன்னுடைய நலன்கள் கேள்விக் குறிக்கு ஆளாகும்போது தன்னுடைய விதிகளை மீறி விடுவார். நிர்ப்பந்தம் ஏற்படும்போது, தொல்லைகள் எழும்போது, […]
தலையங்கம் : மதுவும்! சூதும்!! பொதுவாக மது, சூது இவைகள் இரண்டும் தீமையானது என்பது எல்லோரும் அறிந்தே ஒன்று. அவ்வாறுயிருந்தும் அரசாங்கம் மதுவையும், சூதையும் முற்றிலுமாக தடை செய்ய மறுக்கிறது. அதாவது “மதுவினாலும், சூதுவினாலும் கிடைக்கக் கூடிய வருமானத்தால்‘ அரசே அதை நடத்தவும் செய்கிறது. ஆனாலும் பெயர் அளவிற்கு, “குடி குடியைக் கெடுக்கும்‘ “குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்‘ என்றும் கூறுகிறது. அது மட்டுமல்ல; “மது நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு‘ என்றும் விளம்பரமும் செய்கிறது. அதுவும் […]
ஆலிம் எனத் தனிப்பிரிவு இஸ்லாத்தில் உண்டா? அபூ அப்தில்லாஹ் ஜூலை மாத தொடர்ச்சி… உலகியல் துறைகளில் 5% அவற்றில் கற்றுப் பட்டங்கள் பல பெற்று எஞ்சியுள்ள 95% மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை இன்று கண் கூடாகக் கண்டு வருகிறோம். சாதாரண சளி, காய்ச்சலுக்காக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஓரிரு மாத்திரையில் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்தாமல், எத்தனை வகை டெஸ்ட்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்? ஒருசில மருத்துவர்களுக்கு அப்படி பிரிஸ்கிரிப்சன் […]