தலையங்கம் : அர்ரூம்! முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு முன்பு (மக்காவில் இருந்த போது) உலகில் இரு வல்லரசுகள் மட்டுமே  இருந்தன.  அவைகள் : ஒன்று : கிறிஸ்தவர்கள் ஆட்சி புரிந்துவந்த  ரோமபுரி  பேரரசு. மற்றொன்று : நெருப்பை  வணங்கிக் கொண்டிருந்த  பாரசீக  சாம்ராஜ்யம். அதாவது நெருப்பை கடவுளாக வணங்கும் அன்றைய பாரசீகர்கள் இன்று ஈரானியர்கள். கிறிஸ்துவத்தை சமயமாக ஏற்றுக்கொண்ட அன்றைய ரோம பேரரசு இன்று அமெரிக்கா மற்றும்  இஸ்ரேல்  ஆகும். நபி(ஸல்) அவர்களை கி.பி.610ல் […]

{ 0 comments }

அல்குர்ஆனுக்கு மொழியாக்கம் – விளக்கம் – சுயவிளக்கம் அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எல்லாம் வல்ல இறைவன் உலகின் எல்லாப் பகுதி மக்களுக்கும் அவர்களிலிருந்தே அவனது தூதரைத் தேர்ந்தெடுத்து அவரவர்கள் பேசக்கூடிய மொழியிலேயே அவனது நேர்வழி அறிவிப்புகளை வஹீ மூலம் இறக்கி அம்மக்களை நேர்வழிப்படுத்தினான். இறுதியாக வாழ்க்கை நெறிமுறைகளை முழுமைப்படுத்தி, பூமியின் மையப் பகுதியான அரபு நாட்டில், அரபி மொழி பேசும் அம்மக்களிலிருந்தே தனது இறுதித் தூதரைத் தேர்ந்தெடுத்து, அவரும் அந்த மக்களும் பேசும் அரபி […]

{ 0 comments }

அறிவியல்  மனப்பான்மை  ஆபத்தானதா?  அவசியமானதா? அய்யம்பேட்டை  A.  நஜ்முதீன் இன்றைய உலகம் தகவல்களால் நிரம்பி வழிகிறது. அதாவது பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப், இன்ஸ்டாகிராம், எஃஸ்(யீ) என சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுக்  கொண்டே  இருக்கிறது. மேற்கண்ட சமூக வலைதளங்களில் (Social Media)வில் இளைஞர்களும், முதியோர்களும், சிறுவர்களும் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் எல்லாத் தரப்பினரும் பயனிருந்தும்  பயனில்லாமலும்  நேரத்தை  செலவிடுகிறார்கள். சமூக வளைதலங்களில் அறிவியல், அரசியல், ஆன்மீகம், வரலாறு, மருத்துவம், மனநலம், உணவு […]

{ 0 comments }

வெற்றி  (நஜாத்) என்பது எது? A.N. TRICHY. எல்லோரும் விரும்புவது வெற்றிகரமான வாழ்க்கையைத்தான். இதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது. ஆனால் பெரும்பாலோர் வெற்றி என்னும் முயற்சியில் முழுமையாக முயலாமல் விரக்தியுற்று, சலிப்படைந்து, அல்லது பிரச்சனைகளை சந்திக்க பயந்து வெற்றியை  அடைய  முடியாமல்  பெரும்பாலோர்  தோல்வியை  தழுவுகிறார்கள். அதுவே யாரெல்லாம் எடுத்த காரியத்தில் எப்படியும் வெற்றியின் சிகரத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்களோ அவர்களே “வெற்றி‘யை (நஜாத்தை) அடைகிறார்கள். ஆனாலும் வெற்றியை அடைய கடுமையாக முயற்சி […]

{ 0 comments }

முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம்.அமீர்,  நிந்தாவூர், இலங்கை. 2024  ஏப்ரல்  தொடர்ச்சி…. எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன்தான்‘ என்பதுதான். ஆகவே நீங்கள் அவனுக்கு (முற்றிலுமாக) வழிப்பட்டு (முஸ்லிம்களாக) நடப்பீர்களா? (என்று நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: 21:108) அதாவது, இக்கட்டளைக்கு முழுவதுமாக இணங்கி அடிபணிந்து முஸ்லிம்களாக இருப்பீர்களாக.  (தஃப்சீர் இப்னு கஸீர்: 5:947-950) இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; “எங்கள் […]

{ 0 comments }

வாசிப்பவருக்கு  மாற்றம்  ஏற்பட  வழிகாட்டும்  இறைநூல்! M. சையது முபாரக்,  நாகை 2024  ஏப்ரல்  தொடர்ச்சி…. 1. உறுதியான இறைநம்பிக்கை, இறையச்சம்  இருக்கவேண்டும்: நம்மைப் படைத்து பரிபாலிக்கும் எஜமான். அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் அல்குர்ஆன் என்ற ஆழமான, உறுதியான நம்பிக்கையுடன் வாசிக்கவேண்டும். இம்மை மறுமை வெற்றிக்கான திறவுகோல் அல்குர்ஆன் என்பதை இறையச்சத்துடன் அழுத்தமாக அடிமனதில் பதிய  வைத்து  படிக்கவேண்டும்.   (பார்க்க : 2:2, 8:2) 2. தூய்மையான  எண்ணம்  வேண்டும்: நம் எஜமானன் அல்லாஹ்விடம் நமது […]

{ 0 comments }

ஹிஜ்ரி  கமிட்டியினரின்  முன்பின்னான  முரண்பாடுகள்! எஸ்.எம்.அமீர்,  நிந்தாவூர்,  இலங்கை. துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையிலும், காட்சியின் அடிப்படையிலும் அமைந்ததுதான் எமது ஹிஜ்ரி காலண்டர் எனச் சொல்லிக்கொண்டு காட்சியைக் கண்டுகொள்ளாமல் வெறும் கணக்கீட்டிற்கு  மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்துப் பயணிப்பதுதான் எமது ஆதங்கம். ஹிஜ்ரி  கமிட்டியினரின்  முன்பின்னான  முரண்பாடுகள்: 1. இது எமது இறுதித் தீர்மானம் அல்ல. ஆய்வு நூல்தான்; உங்கள் பரிசீலனைக்கானது அவற்றில் மாற்றம் ஏதேனும் இருந்தால் எமக்கு அறியத் தாருங்கள் நாம் மறுபரிசீலனைக்கு  எடுப்போம் என்று கூறித்தான் அவர்களது […]

{ 0 comments }

ஒன்று சேர்க்கப்படும் நாள் (The day of Resurrection) மறு பதிப்பு : இப்பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நம்மை அல்லாஹ் படைப்பினங்களிலே சிறந்த படைப்பாகப் படைத்து அதிலும் ஒப்பற்ற மார்க்கமாகிய இஸ்லாத்தை நம் உயர் வாழ்க்கை நெறியாக பின்பற்றச் செய்தானே அது அவன் நமக்குச் செய்த மாபெரும் கிருபை! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களாகிய நாம் சில அடிப்படை விசயங்கள் மீது நம்பிக்கை கொள்கிறோம். அவை அல்லாஹ்வை நம்புதல், அவனால் இறக்கியருளப்பட்ட நெறிநூல்களை நம்பு தல் அவனால் அனுப்பப்பட்ட […]

{ 0 comments }

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓர் இறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “இஸ்ராயீல்” என்னும் “சிரியாக்” அல்லது ஹீப்ரு மொழிச் சொல்லுக்கு (இஸ்ரா+ஈல்) அல்லாஹ்வின் அடிமை என்பது பொருள் வழக்கில் உள்ளது. இது இறைத்தூதர் யஃஅகூப்(அலை) அவர் களைக் குறிக்கும். “பனூ இஸ்ராயீல்” என்பதற்கு யஃஅகூபின் மக்கள், அல்லது யஃகூ பின் வழித்தோன்றல்கள் என்று பொருளாகும். இதன்படி “பனூ இஸ்ராயீல்” என்பது இஸ்ரவேலர்களைக் குறிக்கும். […]

{ 0 comments }

மரணத்தை விட கொடூரமானது? அபூ அஹமது இப்ராஹீம், ஒரத்தநாடு இந்த கடிதம் கொண்டுவரும் நபரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப் புங்கள்… என்னிடம் டீ/காபி குடிக்கக் கூட காசு இல்லை. ஒரு டீ வாங்கித்தர முடியுமா?…. எனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவரிடம் போகனும்; உதவி செய்யுங்கள்!… மேற்கண்ட வார்த்தைகளை நம்மில் பலர், பல நேரங்களில் சாலையிலும், பள்ளிவாசலிலும் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தாம். இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர்களில் சிலர் இதே வேலையாகவும் பிழைப்பாக்கிக் கொண்ட உள்ளவர்களாக இருக்கலாம். அல்லது […]

{ 0 comments }

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. ஆதம் நபி அவர்கள் மன்னிப்பு கேட்பதற்குரிய வார்த்தைகளை யாரிடம் கற்றுக்கொண்டார்கள்? அல்லாஹ்விடம்.  அல்குர்ஆன் 2:37 2. நோன்பாளிகள் எந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? ரய்யான்வாசல்.   புகாரி : 3257 3. நபி(ஸல்) அவர்கள் எந்த வாகனத்தில் மிஹ்ராஜ் பயணம் செய்தார்கள்? புராக்.   புகாரி : 3207 4. நபி ஈஸா(அலை) அவர்களின் மற்றொரு பெயர் என்ன? மஸீஹ்.   அல்குர்ஆன் 3:45 5. நபி(ஸல்) அவர்கள் […]

{ 0 comments }

அமெரிக்காவில் இருப்பது வெள்ளை மாளிகையா? (WHITE HOUSE) N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு. பொதுவாக உலகில் ஒரு வீட்டையோ அல்லது நினைவாலயமோ கட்டினால் அதற்கு அவரவர்கள் விரும்பும் பெயரை சூட்டுவது வழக்கம். உதாரணமாக : “நூர் மன்ஜில்‘ என்று தான் கட்டிய வீட்டிற்கு பெயராக சிலர் வைத்திருப்பதாக பார்த்திருக்கலாம். அதுபோல் மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ்–ன் நினைவாக தான் கட்டிய கட்டிடத்திற்கு “தாஜ்மஹால்‘ என்று  பெயர்  சூட்டினார். இதுபோல் இன்னும் ஏராளமான பெயர்கள் உலகில் கட்டிடங்களுக்கு […]

{ 0 comments }

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : சூரிய கிரகணம் என்றால் நாளைக்கு (ஹிபுவீUயூபுஸிஸிக்ஷு) இயல்பாகவே புதிய பிறை ஒன்று தான் என்று நபியவர்கள் சொல்ல வில்லையே!  ஏன்?   தெளிவு : “”இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது; தொழுகைக்குத் தயாராகுங்கள் என்று அழைப்புக்  கொடுக்கப்பட்டது.’’ அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறி வித்தார்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸ லாத்து ஜாமிஆ (தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.  (புகாரி: 1045) […]

{ 0 comments }

தலையங்கம் : வளம் நாடு!-வய(ல்)நாடு! வாழ்வும்!-வீழ்வும்! சென்ற ஜூலை 31ம் தேதி வயநாட்டில் நடந்த நிலச்சரிவு. ஆரம்பத்தில் BREAKING NEWS ஆக  இருந்தது. பிறகு  அதுவே  TRENDING NEWS ஆக  ஆனது. இப்போது அது OLD NEWS ஆக  மாறிவிட்டது.  அதாவது சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக கடந்து போவது என்பது மனித இயல்பில் அரிதாக இருந்தது. ஆனால் சுமார் 2000மாவது ஆண்டுக்கு பிறகு டி.வி. மற்றும் அனைத்து வகையான ஊடகங்களின் (MEDIA) வளர்ச்சியால்  […]

புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாகும் காரணம் என்ன? அபூ கதீஜா அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்) வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை  மிகவும்  கெட்டவை.    (அல்குர்ஆன் 9:9) நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (புரோகிதர்களான) பாதிரிகளிலும், துறவிகளிலும் அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் […]

சொந்த வீடா? வாடகை வீடா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மனிதர்கள் முதல் அனைத்து வசதிகளையும் பெற்ற மனிதர்கள் வரை சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் இலட்சியத்தில் ஒன்றாக உளளது. இந்த இலட்சியம் நினைவாகிப் போனவர்களின் எண்ணிக்கையை  விட  கனவாகப்  போனவர்களின்  எண்ணிக்கையே  அதிகம். “இளமையோ / முதுமையோ,  பகலோ / இரவோ,  தனியாகவோ / துணையாகவே, வசிப்பதற்கு  ஒரு  வீடு  அவசியம்  தேவை. 1. உண்ண  உணவும், 2. உடுத்த  […]

எப்படி முடியும்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, முஸ்லிம்கள் சோதனையான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மீது அமெரிக்கா, சியோனிசம் (யூதர்கள்) ஏகாதிபத்தியவாதிகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். அதுபோல் இந்தியாவில் வலதுசாரிகள், வகுப்புவாதிகள், முஸ்லிம்கள் மீது பன்முகத் தாக்குதல்  நடத்துகின்றனர். மேலும் முஸ்லிம்களில் உள்ள மிகச் சிறிய தீவிரவாத சிந்தனையாளர்களின் நடவடிக்கையின் காரணமாகவும் முஸ்லிம்கள் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவிக்கின்றார்கள். இறைவன் தன் வழிகாட்டும் நூலில் கூறிய கீழ்கண்ட வசனம் இந்த சூழ்நிலையில் […]

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும்— அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. எனது தந்தை அபூதாலிப் இறந்தபோது நான் நபி(ஸல்)அவர்களிடம் நபியே! வயது முதிர்ந்தவரும் முஸ்லிம் அல்லாதவருமான உங்களுடைய பெரிய தந்தையார் அபூ தாலிப் இறந்துவிட்டார் என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள், நீர் சென்று உம்முடைய தந்தையை அடக்கம் (மட்டும்) செய்துவிட்டுப் பின்னர் வேறெந்த (விதமான) வேலையிலும் ஈடுபடாமல் அப்படியே என்னிடம் வாரும் என்று  […]

இரவு உணவு எப்பொழுது? எது? M. சையது முபாரக், நாகை. நாம் உட்பட பல உயிரினங்கள் விடிவதற்கு முன் விழித்து, சூரியன் மறைந்தபின் முன்னிரவில் உறங்கும் விதத்தில் அல்லாஹ் வால் படைக்கப்பட்டிருக்கிறோம். அல்லாஹ் சிலவற்றை இரவில் விழித்து பகலில் தூங்கக் கூடியதாக படைத்திருக்கின்றான். நாம் என்று மின் விளக்குகளை கண்டுபிடித்தோமோ அன்றிலிருந்து இயற்கையை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்புடன், ஆரவாரத்துடன் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து விட்டோம். அதன் விளைவாக உடல் உபாதைகளைப்  பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  இரவு  உணவு  எப்போது? […]

அறிந்து கொள்வோம்!  மர்யம்பீ, குண்டூர் 1. அநாதைகளின் சொத்தை அநியாயமாக விழுங்குபவனின் நிலை என்னவாகும் என  அல்லாஹ்  கூறுகிறான்? அவனதுஉணவு (மறுமையில்) நெருப்பாகும்.  (அல்குர்ஆன் 4:10) 2. கருக்கலைப்பு (குடும்பக் கட்டுப்பாடு) செய்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறுவது என்ன? வறுமைக்குஅஞ்சிகுழந்தைகளைகொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 6:151,17:31) 3. வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு என்று அல்லாஹ்  கூறும்  வசனம் எது?  அல்குர்ஆன் 35:1 4. ஏழு இரவுகள், எட்டு பகல்களும் தொடர்ந்தாற் போல் வேதனை பெற்ற சமூகம் எது என்று  அல்லாஹ்  […]