அமெரிக்காவில் இருப்பது வெள்ளை மாளிகையா?

in 2024 மே

அமெரிக்காவில் இருப்பது வெள்ளை மாளிகையா?

(WHITE HOUSE)

N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு.

பொதுவாக உலகில் ஒரு வீட்டையோ அல்லது நினைவாலயமோ கட்டினால் அதற்கு அவரவர்கள் விரும்பும் பெயரை சூட்டுவது வழக்கம்.

உதாரணமாக : “நூர் மன்ஜில்என்று தான் கட்டிய வீட்டிற்கு பெயராக சிலர் வைத்திருப்பதாக பார்த்திருக்கலாம். அதுபோல் மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ்ன் நினைவாக தான் கட்டிய கட்டிடத்திற்குதாஜ்மஹால்என்று  பெயர்  சூட்டினார்.

இதுபோல் இன்னும் ஏராளமான பெயர்கள் உலகில் கட்டிடங்களுக்கு பெயராக  வைக்கப்பட்டுள்ளன. 

அதுவே அல்லாஹ் தான் மறுமையில் வழங்கும் இல்லத்திற்கு அழகிய பெயரை சூட்டியுள்ளான். “தாருஸ்ஸலாம்என்று அமைதி இல்லம் என்பதாக.

ஆனால் அமெரிக்கர்கள் தங்கள் அதிபரின் மாளிகைக்கு வைத்த பெயர் என்ன  தெரியுமா?

வெள்ளை மாளிகைஏன் என்றால் ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள மனமில்லை அங்கே நிறைவேறி தலை விரித்தாடுகிறது. அதனால் தான் அமெரிக்க அதிபர் குடியிருக்கும் மாளிகைக்குவெள்ளை மாளிகை  என்று  பெயர்.

வெள்ளையனை தவிர வேறு யாரும் அதிபராக வரக்கூடாது என்பதை மறைமுகமாக தெரிவிக்கவே இந்த பெயரை வைத்துள்ளார்கள். (இதுவரை ஒபாமாவை தவிர கருப்பர் இனத்திலிருந்து அதிபராக வேறு யாரும் வரவில்லை)

அமெரிக்காவில் வாழும் இலட்சக் கணக்கான கருப்பர்கள் இன்றளவும் சமுத்துவம் இல்லாத வாழ்வைதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்ககாவில் நிற வெறிக்கு எதிராக போராடிய அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டே இறந்தார்கள்.

உதாரணமாக அப்ரஹாம் லிங்கன், ஜான் எஃப் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங், மால்கம் யீ போன்ற  பல பெரும் தலைவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சுட்டுக் கொன்றது வேறு யாருமில்லை. அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் தான். ஆகவேதான் அமெரிக்காவில் ஆதிக்க சக்தியான வெள்ளையர்களின் ஆதிக்கம் இன்றளவும்  நிலைத்திருக்கிறது.

அதன் பின்னனி என்னவென்றால்? இவ்வுலகில் இஸ்லாம் வளர்ந்துவிடக் கூடாது  என்பதே.

அதாவது பிறப்பால் எல்லா மனிதர்களும் சமமானவர்களே (புயியி னிeஐ ழிre யலிrஐ ய்ree) என்ற  இஸ்லாத்தின் கொள்கை வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இன்று வரை அமெரிக்கா கவனமாக காத்து வருகிறது.

1989ல் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு உலக அரங்கில் ஏற்பட்ட புரட்சியையும், அதை அடுத்து சில முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய குடியரசு நாடாக ஆனதையும் தாங்கிகொள்ள முடியாமல் இஸ்லாத்திற்கு எதிராகவும், இஸ்லாம் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் ஒரு திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.

அதாவது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் இவை மூன்றும் உலகில் ஆதிக்கத்தை நிலைநாட்டிட அநியாயங்களையும், அப்பாவி மக்களையும் கொன்று குவித்துக் கொண்டுதானி ருக்கின்றன.

இதற்காக ஒரு பெருந்தொகை ஒதுக்கப்பட்டு படை பலமும் திரட்டப்பட்டு விட்டது. இதற்கான திட்டமும் வெகு நாட்களாக தீட்டப்பட்டு  நடந்து  வருகிறது.

படை பலம், பண பலம், அறிவு பலம் அனைத்தையும் நாம் மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளும் விரும்பிய அளவில், விரும்பிய விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவர்களின் இந்த ஆதிக்கத் திட்டத்திற்கு துணை போனவர்கள். உலக நாடுகளில் ஏராளம் இந்தியா உள்பட அதில் பல முஸ்லிம் நாடுகளும் உண்டு. ஐக்கிய நாடுகளின் சபையை (.நா. சபையும்) இதற்கு துணை போகியுள்ளது. 

மேலே நாம் குறிப்பிட்ட மூன்று அணிகளுடன் புதியதாக ஒரு பலமும் இன்று இவர்களுடன் இணைந்துள்ளது. அதுதான் பத்திரிக்கை உலகம் (னிedஷ்ழி). இதுவரை உலகில் ஆதிக்க சக்தியின் ஆசைக்கு பத்திரிக்கை துறை (னிedஷ்ழி) வளைந்து கொடுப்பது போல இதற்கு முன்பு  நடந்ததில்லை.

இந்தப் பெரும் திட்டத்தால் உலகில் இஸ்லாத்தை எதிரியாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் காட்டி வருகிறார்கள்.

இப்படி இவர்கள் சில இஸ்லாமிய நாடுகளை தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி அழிக்க நினைக்கிறார்கள். 

உதாரணம்: சமீபத்தில் பாலஸ்தீனம், இஸ்ரேல் போராகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடை செய்வதே அவர்களின்  தலையாய  நோக்கம். 

இது  நிறைவேறுமா?

இஸ்லாத்தை பின்னுக்குத் தள்ளுவதால் இந்த உலகில் மனிதர்கள் இழக்கப் போவது தான் அதிகம். தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அனைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கமாட்டான்.  (9:32)

Previous post:

Next post: