அறிந்து கொள்வோம்!

in 2025 மார்ச்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. இரு ஒளிச்சுடர்கள் என்று எந்த அத்தியாயங்களை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அல்பகரா, ஆலிஇம்ரான் ஆகிய சூராக்கள். முஸ்லிம் 1470

2. நோன்பு எதைப் போன்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பாவங்களிலிருந்துகாக்கின்றகேடயம்போன்றது.    புகாரீ: 1894

3. ஜோசியம் பார்ப்பவரின் (கேட்பவரின்) எத்தனை நாள் தொழுகை அங்கீகரிக்கப்படாது என நபி(ஸல) அவர்கள் கூறினார்கள்? 

நாற்பதுநாட்களின்தொழுகை. முஸ்லிம் 4488

4. வல்லமையுடைய (சக்தியுடைய) அடியார் என யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்?

தாவூத்(அலை) அவர்கள். அல்குர்ஆன் 38:17

5. மேட்டிலிருந்து கீழே இறங்கும்போது என்ன  கூறவேண்டும்?

சுப்ஹானல்லாஹ்.  புகாரி: 2993

6. அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு யாருடையது என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

தாவூது(அலை) அவர்களின் நோன்பு. புகாரி : 1131

7. ஹக்கல் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?

பிளந்து.  அல்குர்ஆன் 54:1

8. நபி(ஸல்) அவர்களின் பெயர்கள் எத்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஐந்து. 1.முஹம்மத், 2.அஹ்மத், 3.மாஹீ, 4.ஹா´, 5. ஆகிப், புகாரி : 3532

9. யூசுப்(அலை) அவர்களுடன் சிறையில் எத்தனை பேர் இருந்ததாக அல்லாஹ் கூறினான்?

இரண்டு.  அல்குர்ஆன் 12:36

10. கப்ருவாசிகள் எந்த செயலுக்காக வேதனை செய்யப்படுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

கோள்சொல்வதால்.  புகாரி : 1361

11. காணாத கனவை கண்டதாக சொல்பவர் மறுமையில் எவ்வாறு நிர்பந்திக்கப்படு வார்?

இரண்டுவாற்கோதுமைகளைஒன்றுடன்ஒன்றுமுடிச்சுபோட.    புகாரி: 7042

12. ஜன்னத்துல் அத்னு எவ்வாறு இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

வெண்மேகம்போன்று. புகாரி : 7047

13. எந்த செயல் மூமினை கொலை செய்வது போன்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சபிப்பது. புகாரி: 6047

14. மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்று எதன்மீது சத்தியம் செய்து அல்லாஹ் கூறினான்? 

காலம்.  அல்குர்ஆன் : 103:1,2

15. யாருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று  அல்லாஹ்  கூறினான்?

பொறுமையாளருக்கு. அல்குர்ஆன் 39:10

16. எந்த முஸ்லிம் சிறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பிறருக்குதீங்கிழைக்காதவர். முஸ்லிம் : 64

17. மலைகளையும், பறவைகளையும் எந்த நபியுடன் சேர்ந்து தஸ்பீஹ் செய்ய அல்லாஹ்  கூறினான்?

தாவூத்நபியுடன்.  அல்குர்ஆன் 21:79

18. அன்பளிப்பு செய்ததை திரும்பப் பெறுபவரை எதற்கு ஒப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நாயுடன்  ஒப்பிட்டு.     முஸ்லிம் : 33:13

19. நியாயத் தீர்ப்புக்குரிய ஞானம் யாரிடம் உள்ளது என அல்லாஹ் கூறுகிறான்?

தன்னிடம். அல்குர்ஆன் 33:63

20. அத்துகான் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?

புகை.  அல்குர்ஆன் 44:10

Previous post:

Next post: